ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?
[image error]காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன?
= நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:)
இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்!
ஏன் -ன்னு தெரியுமா?
சொல்லுங்களேன் பார்ப்போம்:)
இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்!
= என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர்
= இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது;
= “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண்
சங்க காலப் பெண் கவிஞர்களில்…
இவ பாட்டில் மட்டும் = உணர்ச்சி + துணிவு = ரெண்டுமே தெறிக்கும்!
= ஆண் கவிஞன், “முலை-அல்குல்” -ன்னு பாடினா, “கவிச் சுவை”-ன்னு ஏற்கும் சமூகம்;
= பெண், அதே போல், ஆண்களைப் பாடினா???
“சரியான Case-டா” -ன்னு சொல்றவங்க, 21st CE-லயும் உண்டு = Ilakkiya Hypocrisy:)
ஆனா, இவ = 2000 years back “கட்டுடைத்தவ”;
தோழி கோதை (எ) ஆண்டாளை விட இவளே முன்னோடி!
[image error]கன்றும் உணாது, கலத்தினும் படாது…திதலை அல்குல் என் மாமைக் கவினே
= எழுதியவ இவ தான்!
காதலன் புரிதல் கை கூடலை; பெண்ணின் அந்தரங்கத்தில் வீணாகுதே; “வெள்ளைப்” படுதே -ன்னு “பச்சையா” எழுதினவ;
என் மனத்துக்கு இனியாள்; சங்கத் தமிழ் மொழியாள்!
அவ பாட்டு தான் இன்னிக்கி Dosaவில்; பார்ப்போமா?
நூல்: குறுந்தொகை
கவிஞர்: வெள்ளிவீதியார்
திணை: குறிஞ்சி
துறை: தமர் வரைவு மறுத்தல்
அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே
சூழல்:
[image error]கனாக் கண்டேன் தோழீ நான் – ன்னு பாடுனவ ஆண்டாள்; ஆனா அவளுக்கும் முன்னாடியே…
தன் தனிப்பட்ட காதல் (எ) துன்பத்தை,
கனவு (எ) இன்பம் ஆக்கி மகிழ்ந்தவள் = வெள்ளிவீதியார்
தாமதமானாலும்… தலைவன் தன்னைத் புரிஞ்சிக்கிட்டான்; இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கான்;
ஆனா, அவன் பேசுகின்ற பேச்சு, சற்று வீறுள்ள பேச்சு;
எங்கே அவன் பேசக் கேட்டு, தன் வீட்டில், கல்யாணம் மறுத்து விடுவார்களோ? -ன்னு கவலையாம் பொண்ணுக்கு:)
= தலைமகன், தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, வரைவு மறுப்பவோ? எனக் கவன்ற தலைமகள்;
அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்வது போல் களம்!
இப்படி, விதம் விதமான கனவுகளை, ஒவ்வொரு பாத்திரத்தின் மேலேற்றி எழுதும் வெள்ளிவீதியார்!
ஆனா, வெள்ளிவீதியின் உண்மைக் காதல் பத்தி நமக்கு எப்படித் தெரியும் -ன்னு பாக்குறீங்களா?
அவள் பட்ட அல்லாடல்களை – சொல்லாடல்களை,
சக நண்பர்கள்-கவிஞர்கள், வேறு வேறு சங்கக் கவிதையில் எழுதிப், பதித்து வச்சிட்டாங்க:(
(Further Read/Ref : முனைவர். தாயம்மாள் அறவாணன் – மகடூஉ முன்னிலை ; பெண்புலவர் களஞ்சியம்)
காபி உறிஞ்சல்:
அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?
ஏன்டியம்மா தோழீ, நம்மூருல…
பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நல்லவர்கள்/நண்பர்கள் இருக்காங்கடீ!
= பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?
[image error]தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்
தண்டு கையில் உடையவர்கள்;
வெள்ளைத் தலை; அதில் சிதவல் (தலைப்பாகை) கட்டினவங்க!
= பெருசு -ன்னு இன்னிக்கி சொல்றோமே…
= தலை நரைத்தாலும், அறிவு நரைக்காதவர்கள்
= தூய காதலின் முன்…, குலம்/ கோத்ரம்/ சாதி/ சவரன் பேசாதவர்கள்; பெண்ணை ஏசாதவர்கள்
[image error]சிதவல் = சிதறிய துணி; நெசவுத் தறியிலே…
* ஓரமாச் சிதறி எடுப்பதால் சிதவல் = தலைப்பாகை/ துண்டு
* வெட்டி எடுப்பதால் = வேட்டி;
எந்தப் புண்ணியவான், தமிழ்ச் சொல் வேட்டியை, வே’ஷ்’டி ஆக்கினானோ?
‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே!
நன்று நன்று -ன்னு சொல்கின்றனர் = தலைவனோடு வந்த உற்றார்; (மாக்கள் = மக்கள்)
இன்று, உங்கள் வரவால், பெருமை சேரும் -ன்னு, தலைவனின் உறவுகளை வரவேற்கும் மக்கள்!
[image error]இந்த அவை – இந்த மக்கள் இருக்கும் போது, நீ ஏன்டீ பயப்படுற?
ரெண்டு வீடும் முட்டிக்காமப் பேசுவாங்க;
சும்மாக் கிடந்து கவலைப்படாதே தலைவியே! பிரிந்த நீங்கள், ஒன்னு சேரும் நேரம் நெருங்கிருச்சி = பிரிந்தோர்ப் புணர்ப்பர்; பிரிந்தோர்ப் புணர்ப்பர்!
(முருகனருள் – கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்)
இப்படிக் கனவுகளாய்…
தமிழ் எழுதியே, வாழ்க்கை வாழ்ந்த தையலாள் = வெள்ளிவீதியார்!
நின் அகம் வாழி; புறம் வாழி;
துணிவும் தமிழும் வாழி வாழி!
dosa 104/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
