துன்பம் இன்பமாகும் குறள்!

[image error]திருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க!

kural.muthu.org

துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:)


* அவன் இல்லாமல் இருப்பது = துன்பம்

* ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:)


சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல!

டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:)



துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை;

(பொருட்பால் – வினைத் திட்பம் – 669)


இன்பம் கடல் மற்றுக் காமம் – அஃது அடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது;

(காமத்துப் பால் – படர் மெலிந்து இரங்கல் – 1166)


அடிக்கோடு இட்டவை – என்ன தொடை? -ன்னு சொல்லுங்க:)



காபி உறிஞ்சல்:


1) துன்ப-இன்பம்


துன்பம் உற வரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை


(முடிவிலே) இன்பம் தரப்போகும் ஒன்றைச் செய்யும் போது

(துவக்கத்திலே) துன்பம் மிக வந்தாலும், துணிவு மேற்கொண்டு, அதைச் செய்து முடிக்க வேண்டும்!


2) இன்ப-துன்பம்


இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது


காமம் = மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;

காமம் = வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;


இப்பிடி, ஒரே உவமை (கடல்),

இரண்டுக்கும் ஆகி வருவது என்ன அணி? I dunno, u tell me plz:)


dosa 103/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2012 04:00
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.