இடையோடு இழுத்து வளைத்திட
மீசையில் சிக்கிய அவளிதழ்
சிதறிய நித்திலப் பரல்கள்
எடுக்கவுமில்லை கோர்க்கவுமில்லை
நிரம்பி வழிந்த அமைதியைக் கலைத்தது
இருவரது மூச்சுக்காற்று
புடவை நாணத்தில் சுருங்கிற்று
காலம் கொஞ்சம் சலித்துகொண்டது
வெளிச்சத்திற்கு வெட்கமில்லை
சாளரத்தின் வழியே அழையா விருந்தாளியாய் நுழைந்தது
முழுவதுமாய் அவனுள் லயித்தாள்
அவனைப் பொருட்படுத்தவிலை
கடந்துசெல்லும் நிமிடங்களை கைகொள்ள முடியாதென்று
-வெண்பா கீதாயன்
Published on December 27, 2023 11:19