எழுதக் கொஞ்சம் நேரமும், அச்சிலும், தேர்ந்தெடுத்து நெட்டிலும் வாசிக்கச் சற்று நேரமும், முதுகு வலிக்குக் சிறிது நேரமுமாக நாட்க:ள் நகர்கின்றன.
வாத்திமர் நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் இறுதியில் நிறைவு பெறும் புதுமையான இந்தப் புதினம்.
ஈதிப்படி இருக்க, சொல்வனம் இணைய இலக்கிய இதழில் நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய ‘ஐவர் – தமிழின் நம்பிக்கை’ என்ற கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. தேர்ந்த வாசகரும் விமர்சகருமான சரவணன் தேர்ந்தெடுத்த முதல் ஈடு நன்னம்பிக்கை நட்சத்திரங்கள் குறிப்பிடத் தகுந்தவர்களே.
ஐந்து பேர் என்பதை இருபத்தைந்து என்று நீட்சி பெறச் செய்தால் இன்னும் ரசமாக இருக்கும்.
அவர்களில் என் இளைய தலைமுறை எழுத்தாளர் நண்பர்கள் அனைவரும் இருப்பார்கள். குறைந்த பட்சம் ஆளுக்கு ஒரு நல்ல கதையாவது எழுதிப்பார்கள்.
சட்டென்று ஒரு பெயரைச் சொல்லச் சொன்னால் சட்டென்று மனதில் தோன்றுவது செந்தில் ஜெகந்நாதன்.
இவருடைய சிறுகதை அனாகத நாதம் இன்னும் பல காலம் என் உட்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Published on May 20, 2025 04:48