நீலகண்டம் – சுக்கிரி உரையாடல் – இன்று மாலை
அன்புள்ள ஜெ,
கடந்த அக்டோபர் 13 அன்று சுக்கிரி நண்பர்கள் சார்பாக பழனி ஜோதி எழுத்தாளர் சாம்ராஜின் ‘கொடைமடம்‘ பற்றிய தன் வாசிப்பை முன்வைத்தார். ஒரு சமகால நாவலின் கூறுமுறையும், முன்னும் பின்னும் கலைந்து அடுக்கப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் நாவலில் ஒன்றுக்கொன்று இணையும் விதத்தையும் பழனி தன் உரையில் விளக்கினார்.
அதன் பின் நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் கேள்விகளையும் எழுப்ப, ஆரம்பம் முதலே ஸூம் இணைப்பில் இருந்த சாம்ராஜ் அதற்கான தன் கருத்துகளையும் பதில்களையும் கூறினார். நாற்பதுபேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் இணைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கும், அந்த நிகழ்வின் விவரங்களை தளத்தில் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி. அந்த இணைய நிகழ்வின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
நவம்பர் மாதத்திற்கான நாவல் சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்‘. வாசிப்பைப் பகிர்பவர் கொரியாவில் வசிக்கும் நண்பர் சதிஷ். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அழைப்பிதழில் உள்ள ஸூம் இணைப்பைப் பயன்படுத்தி ஆர்வமுள்ள நண்பர்கள் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு பங்கேற்க வேண்டுகிறேன். கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
***
ZOOM Meeting link:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
Passcode: 197116
அக்டோபர் 12, ஞாயிறு மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
சுக்கிரி சிறுகதை கூட்டுவாசிப்பு – சனிக்கிழமை, மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
அன்புடன்,
ராஜேஷ்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

