சென்னை புத்தக விழா- விஷ்ணுபுரம் கடை எண் 476 மற்றும் 477
சென்னை புத்தகவிழா வரும் ஜனவரி 8 முதல் தொடங்கவுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் கடை எண். 476-477.
இந்த ஆண்டு நான் எழுதிய சில புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. பழைய நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவந்துள்ளன. நாஞ்சில்நாடன், இசை, அஜிதன், நிஷா மன்ஸூர், கல்பற்றா நாராயணன், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என பலவகையான எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ளன.
நல்வரவு.
ஜெயமோகன் எழுதிய காவியம் அவருடைய வழக்கமான நாவல்களில் இருந்து கட்டமைப்பு மொழிநடை அனைத்திலும் முற்றிலும் மாறுபட்டது. சமகால அவலங்களைச் சொல்லும் நாவல்களையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வரலாறும் தொன்மமும் கலக்கும் நாவல்களையும் எழுதியுள்ளார். அவ்விரு உலகங்களும் ஒன்றோடொன்று ஊடறுக்கும் படைப்பு இது.
காவியம் விஷ்ணுபுரம் பதிப்பகம்
சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாகக்கிடைக்கும் கடல் நாவல் ஜெயமோகனின் உத்வேகம் மிக்க நாவல்களில் ஒன்று. மாபெரும் மானுடநாடகம் என்றே சொல்லத்தக்க படைப்பு. தீவிரமான மொழியில் காவியத்தன்மையுடன் விரியும் இப்படைப்பு மகத்தான மேலைநாட்டு ஓவியங்களின் கனவை தன்னகத்தே கொண்டது.
கடல் விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன் ஓஷோ பற்றி ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். அந்த உரை எத்தனை செறிவானது என இந்நூல் காட்டும். அதேசமயம் உரைக்குரிய விரைவான வாசிப்போட்டமும் கிடைக்கும். இது ஓஷோ என்ன சொன்னார் என்று சொல்லும் நூல் அல்ல. ஓஷோவை எங்குவைத்து எப்படிப் புரிந்துகொள்வது என்று விவாதிப்பது.
ஓஷோ மரபும் மீறலும் வாங்க
அஜிதனின் புதிய சிறுகதைத் தொகுதி. அஜிதனின் சிறுகதைகள் எந்த முயற்சியும் இல்லாதவைபோல மிக எளிதான ஓட்டத்துடன் எழுதப்படுபவை. அதேசமயம் கூர்ந்த வாசகனுக்குள் விரிந்துகொண்டே செல்லும் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவை. இத்தொகுதியில் அஜிதனின் அண்மைக்காலச் சிறுகதைகள் அடங்கியுள்ளன.
நீண்டகாலத்திற்கு பின் மறுபதிப்பாகியிருக்கும் ஜெயமோகனின் கட்டுரைத் தொகுதி இது. இருபதாண்டுகளுக்கு முன்பு இளம்படைப்பாளிகளாக அறிமுகமானவர்களைப் பற்றிய மதிப்பீடு. அவர்களில் பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகளாக ஆகியுள்ளனர். அவர்களின் இடம் என்னவாக ஆகியுள்ளது என ஒப்பிட்டு நோக்குவது ஆர்வமூட்டுவது.
புதிய காலம் வாங்க
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் ஜெயமோகன் நாஞ்சில்நாடனைப் பற்றி எழுதிய சிறு நூல். மூத்த படைப்பாளி என்னும் வியப்புடனும் மூத்தவர் என்னும் உரிமையான பகடியுடனும் எழுதப்பட்ட படைப்பு.
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்
மிகச்சிறந்த புனைவுகளுக்கு நிகரான வாசிப்பனுபவத்தை அளிக்கும் இந்தக் கட்டுரைகள் இங்கே வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுப்பதிவுகள்.
நான்காவது கொலை ஒரு பகடிநூல். துப்பறியும் கதைகளை பகடிசெய்யும்பொருட்டு எழுதப்பட்டது. துப்பறியும் கதைகளின் பாணிகளை அறிந்தவர்கள் சிரித்துக்கொண்டே படிக்கத்தக்க படைப்பு.
நான்காவது கொலை
மொழியை சுருக்கமாக, வேடிக்கையான திரிபுகளுடன், கையாண்டு ஆழ்ந்த பொருளை உருவாக்கும் கவிஞர் கல்பற்றா நாராயணன். அவருடைய கட்டுரைகள் கவித்துவம் திரண்ட அசல் சிந்தனைகளைக் கொண்டவை. அழகியல் கட்டுரைகளின் தொகுப்பை அதே மொழிநுட்பத்துடன் அழகிய மணவாளன் மொழியாக்கம் செய்துள்ளார்.
கருப்பு இருட்டல்ல வாங்க
இசை அண்மைக்காலமாக எழுதிவரும் மரபிலக்கிய வாசிப்புக் கட்டுரைகள் பெரும்புகழ்பெற்றவை. இன்றைய காலகட்டத்தில் வாழும் ஒரு நவீனக் கவிஞனுக்கு நம் தொல்மரபு வேடிக்கையும் நெகிழ்வும் தரிசனமுமாக எப்படியெல்லாம் பொருள்படுகிறது என்பது நம் சமகாலத்தையும் மரபையும் அறிவதற்கான ஒரு பெரிய வாசல்
நாஞ்சில்நாடன் கதைகளில் இருந்து கட்டுரைகளுக்குத் திரும்பியபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கதைகளின் அகவயநடையும், சீற்றமும் எள்ளலும் கொண்ட சொல்லாட்சியும் அமைந்த இக்கட்டுரைகள் வழியாக அவர் மேலும் ஆழமான ஒரு புனைவுத்தளம் நோக்கிச் சென்றார்.
காவலன் காவான் எனின் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

