(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Pa Raghavan

“பாட்டியின் கனவுகளில் அடிக்கடி வருபவள் சூர்ப்பனகை. அவள் வந்த மறுதினம் ஏதாவதொரு அசம்பாவிதம் நிச்சயம் நடக்குமென்பாள் அவள்.
“உன் மேல நான் ஆசைப்படறேன்னு ஒரு பொண்ணு வெட்கத்தைவிட்டு வெளிப்படையா சொல்றது உயிரை வெளில எடுத்து சுண்டுவிரல் முனைல நிக்கவெச்சுண்டு பேசறதுக்குச் சமானம். போடீ சரிதான்னு அதுக்கு ஆம்பிளை பதில் சொல்லிவிட்டான்னா, அந்த க்ஷணம் பிராணன் போயிடும். மனுஷப் பிறவியாயிருந்தா என்ன? ராட்ஸஸப் பிறவியானத்தான் என்ன? பொண்ணு இல்லியோ அவ? அவளுக்கு அறுபட்டது மூக்கில்லே; மூச்சு! ஆறுமா அவ ஆத்மா? அதான், என் பிராணனை வாங்கறா. ஜென்மாந்திரத்தில நான் சபரியா இருந்தேனாம்! மானசீகமா ராமனைப் பிள்ளையா சுவீகரிச்சுண்டேனாம். அதான் வந்து வந்து, விட்டேனா பார் உன் பிள்ளையோட வம்சத்தைங்கிறா..”
சற்றும் தடங்கலோ, சங்கடமோ, நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமோ துளியுமற்றுத் தன் கனவை விவரித்துக்கொண்டே போவாள் நீலுப்பாட்டி.”

Pa Raghavan, அலை உறங்கும் கடல்
Read more quotes from Pa Raghavan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

அலை உறங்கும் கடல் அலை உறங்கும் கடல் by Pa Raghavan
30 ratings, average rating, 2 reviews

Browse By Tag