கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர் > கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்'s Quotes

Showing 1-30 of 2,264
« previous 1 3 4 5 6 7 8 9 75 76
sort by

  • #1
    A. Muttulingam
    “சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. குறிஞ்சி நிலத்துக்கு நூறு பாடலும், நெய்தல் நிலத்துக்கு நூறு பாடலும், மருதம் நிலத்துக்கு நூறு பாடலும், முல்லை நிலத்துக்கு நூறு பாடலும் பாலை நிலத்துக்கு நூறு பாடலுமாக ஐந்நூறு பாடல்கள். பனியும் பனிசார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப்பிரதேசங்களுக்குத்தான்.

    என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருக்கிறது. அதற்கு இரண்டு செட்டை. ஆறுமணிக்குருவியும் (Indian Pitta) இருக்கிறது. அதற்கும் இரண்டு செட்டை. சரியாக காலை ஆறுமணிக்கு இந்தக் குருவி ’கீஈஈஈய்க், கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்கு பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்கு பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆறாம் திணை.”
    அ.முத்துலிங்கம், ஐயாவின் கணக்கு புத்தகம்

  • #2
    A. Muttulingam
    “அந்த பெண்ணின் முகம் கூட எனக்கு ஞாபகம்இல்லை. கை ஆடும் ஒருவர் எடுத்த புகைப்படம்போல உருவம் மங்கலாகவே நினைவில் இருந்தது.”
    A. Muttulingam, உண்மை கலந்த நாட்குறிப்புகள்

  • #3
    Jeyamohan
    “பெண்கள் நகைகளை அணிந்துகொள்ளுதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் உண்டு. அவை முற்காலத்தில் இலைகளாலும் கொடிகளாலும் அவளுக்கு அணிவிக்கபட்ட குல அடையாளங்கள். எந்தக் குலத்துக்கு அவள் கட்டுப்பட்டவள் என்பதைச் சொல்லுபவை. கன்றுகளின் கழுத்துமணிகள் மற்றும் கட்டுக்கயிறுகள் போல. காலப்போக்கில் அந்தத் தளைகள் பொன்னால் ஆனவையாக மாறின. கௌரவச்சின்னங்களாக, அழகுப்பொருட்களாக ஆயின. அவை இல்லாமல் வாழ்வதே முடியாது என பெண்கள் எண்ணுமளவுக்கு. கலாச்சாரத் தளைகள் என்றால் அப்படி நமக்கு நெடுங்காலமாக பழகி, நம் ஆழ்மனதால் குறியீடாக மாற்றப்பட்டு நம்மாலேயே விரும்பி அணியப்படுவனவாக இருக்கும். ஆகவே ஆழமான அகவிடுதலை இல்லாமல் நம்மால் உதறமுடியாதனவாக இருக்கும்.”
    Jeyamohan, கண்ணீரைப் பின் தொடர்தல்

  • #4
    Masti Venkatesha Iyengar
    “அரண்மனைகளில் எப்போதும் அபின் முதலானவை இருக்கும். அரண்மனை வாழ்வில் ஆகாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவே விஷமும் முக்கியமானது. பதம் தவறிய வாழ்க்கைக்கு ஆகாரத்தைவிட விஷமே விருப்பமான வஸ்து, ஆகாரம் தராத விடுதலையை தரக்கூடியது.”
    Masti Venkatesha Iyengar, Chikaveera Rajendra

  • #5
    Vishnu Sakharam Khandekar
    “இரவில் அவன் பழங்களைப் புசிக்கும்போது நான் அவனிடம் பேசிக் கொண்டிருப்பேன். அழகான இனிய பழத்தில் ஒரு நாள் புழு நெளிந்தது. அவனுடைய நகைமுகம் திடீரென்று மாறியது. மான் போல் பரந்தவையும், சிங்கம் போல் அச்சமற்றவையுமான கண்களை என் புறமாகத் திருப்பி, "இளவரசே, வாழ்க்கை இது தான். இது அழகியது, இனியது, ஆனால் இதில் எப்பொழுது எங்கிருந்து புழு வந்து நெளியும் என்பதைச் சொல்ல முடியாது" என்றான்.”
    Vishnu Sakharam Khandekar, Yayati: A Classic Tale of Lust

  • #6
    Vishnu Sakharam Khandekar
    “இந்த உலகில் யாருமே தமக்காகத்தான் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை. மரம் செடி கொடிகளின் வேர், பக்கத்திலுள்ள ஈரத்தை நாடிச் செல்வது போல, மாந்தரும் தமது சுகத்துக்காக அருகிலுள்ளவர்களை ஆதாரமாகக் கொள்கிறார்கள். இதைத்தான் உலகம் சில சமயம் அன்பு என்றும், சில சமயம் காதல் என்றும், சில சமயம் நட்பு என்றும் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது ஒவ்வொருவரும் தம்மிடமே கொள்ளும் அன்பு. ஒருபுறம் ஈரம் வற்றிவிட்டால் மரங்களும் கொடிகளும் வாடிவிடுவதில்லை. அவற்றின் வேர்கள் வேறொரு புறத்தில் எங்கே ஈரம் இருக்கிறது என்று தேடுகின்றன. அருகில் இருந்தாலும் சரி, தொலைவில் இருந்தாலும் சரி, அந்த ஈரத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவை பசுமையாக இருக்கின்றன.”
    Vishnu Sakharam Khandekar, Yayati: A Classic Tale of Lust

  • #7
    U.R. Ananthamurthy
    “எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசிபோட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போக மாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று... இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றி வம்பு பேசுவார்கள். வம்புச் பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட "தொடுதல்" என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வைத் தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் ப்ளேக் நோயால் இறந்துகொண்டிருக்கும் போது, அவள் ஊரைவிட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலுணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையைக் கொடுத்ததாக நான் நினைத்தேன். இதை அடிப்படையாக வைத்து 'தரங்கிணி'யில் எழுதிய கதைதான் பின்னர் சம்ஸ்காரா நாவலாக விரிவடைந்தது...”
    U.R. Ananthamurthy, Samskara: A Rite for a Dead Man

  • #8
    U.R. Ananthamurthy
    “நல்லதுக்கு நாக்கு அசையாதுப்பா, பாவத்துக்குப் பரபரக்கும்”
    U.R. Ananthamurthy, Samskara: A Rite for a Dead Man

  • #9
    Pannalal Patel
    “மனிதன் கெட்டவன் அல்ல; பசிதான் பொல்லாதது.”
    Pannalal Patel, Manvi Ni Bhavai (માનવી ની ભવાઇ

  • #10
    “எப்போதும்,
    ‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
    போகாதே’ என்று சொல்லும்
    நேயமுகில்
    அன்று ஒரு கோபத்தில்
    ‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
    என்றுவிட்டாள்.
    ‘சரி, நான் போறேன்’ என்று
    திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
    சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
    தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
    சமாதானம் செய்ய வந்தாள்.
    நான் வாங்கிக்கொள்ளவில்லை.
    திடீர் உற்சாகத்துடன்
    ‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
    அட, ஆமாம்.
    ‘எனக்கும் லீவு’ என்றாள்.
    ‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
    அது அவளுடைய கரடி பொம்மை.
    தன் பொம்மைகளையெல்லாம்
    ஒவ்வொன்றாக அழைத்து
    விடுமுறை அறிவித்தாள்.
    சமைக்க வைத்திருந்த காய்கள்,
    தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
    விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
    தண்ணீர் பாட்டில்,என்று
    தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
    விடுமுறையைக் கொடுத்தாள்.
    ஒவ்வொரு அறையாக நுழைந்து
    தன் பொற்பிரம்பால் தொட்டு
    பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
    தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
    தன் பெருமூச்சை
    ஒரு குமிழியாய் வெளியிட்டு
    காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.”
    முகுந்த் நாகராஜன்

  • #11
    “முன்பின் பழக்கம் இல்லாத
    பயண வழி உணவுவிடுதியில்
    சாப்ப்பிட்டுவிட்டு
    கைகழுவப்போனேன்
    சாதாரண உயரத்தில்
    இரண்டு வாஷ் பேசின்களும்
    மிகக்குறைந்த உயரத்தில்
    ஒரு வாஷ்பேசினும் இருந்தன
    கை கழுவும்போது
    காரணம் தெரிந்துவிட்டது
    குள்ள வாஷ்பேசின் முன்
    இல்லாத குழந்தையின் மேல்
    செல்லமாக தண்ணீர் தெளித்து
    விளையாடிவிட்டு
    விரைவாக வெளியே வந்துவிட்டேன்”
    முகுந்த் நாகராஜன்

  • #12
    “அப்போது அந்த நாட்டின் மேல் பறந்து போய்
    குண்டு போடுவதைக் காட்டினார்கள்.
    அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு அதில் செத்த
    அப்பாவிகளைக் காட்டினார்கள்.
    நடு நடுவில் அடிபட்ட அப்பாவிகளிடம்
    மைக்க நீட்டி விசாரித்தார்கள்.
    அதற்குள் இந்த சண்டை வந்துவிட்டது.
    இப்போது இந்த நாட்டின் மேல் பறந்து போய்
    குண்டு போடுவதைக் காட்டுகிறார்கள்.
    அப்போது அடிபட்டவர்களையும் செத்தவர்களயும்
    பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை இப்போது.
    அடிபட்டவர்கள் எல்லோரும் காயத்தின் வடு
    கூடஇல்லாமல் உடல் தேறி இருக்க வேண்டும்.
    செத்தவர்களைப் பற்றிய நினைவுகள்
    அவரவர் உறவினர்களிடம் இருந்தும்
    மாயமாய் மறைந்து போய்
    எல்லோரும் சந்தோஷமாக
    வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
    அப்படித்தான் இருக்கும்,
    இல்லாவிட்டால் காட்டி இருப்பார்களே.”
    முகுந்த் நாகராஜன்

  • #13
    “அந்த சின்னக் கல்லை மெதுவாக
    உதைத்து உதைத்து முன்னேற்றி
    தன் கூடவே பள்ளி வரை
    அழைத்துக்கொண்டு போகும் காரியத்தில்
    கவனமாக இருந்தவள்
    எதிரே வந்த தெரு நாயைக்
    கொஞ்சம் தாமதமாகத்தான்
    கண்டுகொண்டாள்.
    அமைதியான அந்த நாய்க்கு
    பயந்து விலகிய போது
    சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
    பின்னால் இருந்து ஓடி வந்து
    அவளை சற்றே உரசிச் சென்றது
    கூட்டிக் கொண்டு வந்த கல்லை
    அப்படியே விட்டுவிட்டு
    விரைந்து நடந்தாள்,
    முகத்தில் ஆர்வம் பொங்க.
    இந்த சம்பவத்தை தன்
    தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
    அவளுக்கு
    ஒரு பீரியடு போதுமோ,
    ரெண்டு பீரியடு ஆகுமோ.”
    முகுந்த் நாகராஜன்

  • #14
    “போனவாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
    கை தவறி உடைத்த அதிமதுரா
    “சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சு”
    என்ற வாக்கியத்தை பரிசளித்தாள்.
    உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
    அந்த வாக்கியத்தைப் பொருத்திவைத்து
    வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
    காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
    முகுந்த் நாகராஜன்

  • #15
    “இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
    உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
    வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
    இதெல்லாம் ஒரு காரணமா?”
    முகுந்த் நாகராஜன்

  • #16
    “அத்தனை சிறிய சிறுமிக்கும்
    தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
    ரயில் பெட்டியில்.

    அவள் அங்கு உட்காராமல்
    பெட்டி முழுவதும்
    பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.

    எல்லா இருக்கைகளும் நிரம்பி
    அவள் இடம் மட்டும்
    காலியாக இருந்தது
    பயணம் முழுவதும்.

    அந்தப் பெட்டியே
    முன் பல் விழுந்த
    அவளது சிரிப்பைப் போல
    தோற்றமளித்தது..”
    முகுந்த் நாகராஜன்

  • #17
    “குறுகிய பால்கனியில்
    முன்னும் பின்னும் நடந்து
    பாடம் படிக்கிறாள் சிறுமி.
    அவள் உதடுகள்
    முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
    கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.”
    முகுந்த் நாகராஜன்

  • #18
    “விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
    காலம் காலமாக
    உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
    உடைந்த சத்ததுக்கும்
    ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
    நடுவில் இருக்கும் மவுனத்தில்
    சிதறிய துண்டுகளில் இருந்து
    தப்பிக்கும் வாக்கியங்களை
    இயற்றுகிறார்கள்.
    போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
    கை தவறி உடைத்த அதிமதுரா
    அவள் அம்மாவுக்கு
    'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
    என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
    உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
    அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
    வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
    காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
    முகுந்த் நாகராஜன்

  • #19
    “முப்பது கம்பெனிகளும்
    இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
    அந்தப் பெரிய கட்டிடத்தைத்
    தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
    அந்த சித்தாள்,
    ‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
    கட்டும்போது இருந்த இடம்
    எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
    முற்றிலும் மாறிப்போய்,
    தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
    ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
    பெருமையுடன் பார்த்தாள்,
    அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
    புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
    என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.”
    முகுந்த் நாகராஜன்

  • #20
    “கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
    வாடிப்போன எருக்கம்பூ மாலையை
    கழற்றிவிட்டு,
    களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
    நேற்று மாதிரி இருக்கிறது.
    நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
    சின்னவயசின் பெரிய கிணறு
    என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
    ஃப்ளாட்டின் சின்ன அறையில்
    கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
    பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
    கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
    நன்றாகத்தான் இருக்கிறது
    பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
    சந்தோசமாகத்தான் இருக்கிறது.
    கிணறுதான் குறைகிறது.
    அதை யாராவது அனுப்புகிறீர்களா
    அட்டாச் பண்ணி?”
    முகுந்த் நாகராஜன்

  • #21
    “கதவு
    பிரிவைக் குறிக்கிறது
    குழந்தைக்கு.
    கதவு அருகே போனாலே
    அழ ஆரம்பித்து விடுகிறது.
    அதனால் தினமும்
    சுவர் வழியாக வெளியேறி
    அலுவலகம் போய் வருகிறான்
    புது அப்பா.”
    முகுந்த் நாகராஜன்

  • #22
    “டுட்டு' என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை
    'டாட்டா' என்பானாம் இன்னொருத்தன்
    'சாச்சா' என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி
    பிஸ்கட்டை 'அக்கி' என்று சொல்பவளும்
    'பையை' என்று பைக்கை சொல்பவளும்
    டிவியை 'டிடி' என்பவனுமாக வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது குழந்தைகளின் உலகம். எல்லாவற்றையும் எல்லோரும்
    ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
    சொல்லித் தருவோம் அவர்களுக்கு.”
    முகுந்த் நாகராஜன்

  • #23
    “குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
    வெளியேற முடியாமல்
    கண்ணாடிகளில் முட்டி முட்டி
    தடுமாறிக் கொண்டிருக்கிறது
    பட்டாம்பூச்சி.
    சிக்னலில் பஸ் நின்றபோது
    திறக்க முடியாத ஜன்னலில்
    செய்தித்தாள் வாங்கச் சொல்லி
    கண்ணாடியைத் தட்டுகிறான்
    சிறுவன்.”
    முகுந்த் நாகராஜன்

  • #24
    “ஓடும் ரயிலில்
    அடம் பிடித்து
    வாங்கிய குழலில்
    அதை விற்றவன்
    வாசித்த பாடலை
    சலிக்காமல்
    தேடிக்கொண்டிருக்கிறது
    குழந்தை.”
    முகுந்த் நாகராஜன்

  • #25
    Masti Venkatesha Iyengar
    “லிங்கராஜன் இதுவரை குழந்தைகளைக் கவனிக்காமலிருந்தது அவர்களின் மீது பிரியம் இல்லாததால் அல்ல. சீட்டாட்டத்தில் அமர்ந்தவர்கள் அம்மா  இறந்த செய்தி வந்தாலும் எழுந்திருக்கமாட்டார்கள். சிம்மாசனத்தைக் கைப்பற்ற முயலும் வியவகார விளையாட்டு, சீட்டாட்டத்தைவிட அதிகமாக மெய்மறக்கச் செய்யும் விளையாட்டு. சீட்டாட்டத்தில் பணம் தான் போகும். இந்த விளையாட்டில் உயிரே போய்விடும். சிறிது கவனம் பிசகினாலும் வம்சமே நிர்மூலமாகிவிடும்; மற்றவர்களுக்குத் தான் செய்ய நினைத்திருந்த கேட்டை தனக்கே மற்றவர்கள் செய்து விடுவார்கள்.”
    Masti Venkatesha Iyengar, Chikaveera Rajendra

  • #26
    Masti Venkatesha Iyengar
    “சிறு குழந்தை ஒன்றை ஒரு நாய் துரத்தும் பொழுது அது பயப்படுவதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் மத்தியில் ஒரு பாம்பை தூக்கி எறிந்து அவர்கள் பயந்து அலறுவதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம். தோட்டத்திலிருந்து ஊருக்குள் வருபவர்களுக்கு எதிராக முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு போய் பிசாசுபோல் கத்தி அவர்கள் பயந்து ஓடுவதைப் பார்ப்பதில் ஒரு குதூகலம்.”
    Masti Venkatesha Iyengar, Chikaveera Rajendra

  • #27
    “ஓநாய் செத்துப் போனாலும், கண் கோழிக் கூட்டின் மேல்தான்.”
    P. Kesavadev, അയൽക്കാർ | Ayalkar

  • #28
    “எங்கம்மா சொல்வாள் 'பாத்திரம் அறிந்து பிச்சை இடணும்' என்று.

    எங்கம்மா சொல்வாள் 'பசிக்கிற வயிறுக்குச் சோறு போடணும்'மின்னு.”
    P. Kesavadev, അയൽക്കാർ | Ayalkar

  • #29
    S.L. Bhyrappa
    “பன்னிரண்டு மொளம் ஆழமுள்ள கிணத்துக்கு ஆறு மொளக் கயிறு போதுமா?”
    S.L. Bhyrappa, ಗೃಹಭಂಗ [Grihabhanga]

  • #30
    “கன்னா மாஸ்டரின் இயற்பெயர் கன்னா தான். திலகர், காந்தி, பட்டேல், நேரு போன்ற இனத்தைக் குறிக்கும் பெயர்களெல்லாம், தனி மனிதர்களின் பெயர்களாகிவிடவில்லையா? அப்படித்தான் இதுவும். இந்த நாட்டில் இருந்து சாதியை ஒழிக்க இது ஒரு நல்ல, சரியான உபாயந்தான். சாதியிடமிருந்து அதன் பெயரைப் பிடுங்கி, தனியொரு மனிதனுக்கு அளித்து விடுவதால் சாதியிடம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். பிறகு என்ன? அது தானாகவே அழிந்துவிடும்.”
    Shrilal Shukla, राग दरबारी



Rss
« previous 1 3 4 5 6 7 8 9 75 76