கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்

Add friend
Sign in to Goodreads to learn more about கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்.

https://www.goodreads.com/manimaaran

Loading...
“விஷப்பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும் காசு ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.”
Shri Ramakrishna Paramahamsa

“ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.”
Chidbhavananda, The Bhagavad Gita

Kalpatta Narayanan
“காய்த்துப்போன விரலிருந்தும்
எத்தனை அழுத்தியபோதும்
செயல்படவில்லை.

இது தொடுதிரை அப்பா
மெல்ல தொட்டாலே போதும்
அழுத்தவே வேண்டியதில்லை
சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை
இதோ இப்படி

அவன் விரல்
நீரின்மேல் ஏசு போல
நடந்தது
அவன் விரும்பியபடி
செயல்பட்டன எல்லாம்

உலகம்
எனக்கு வசப்படாமலிருந்தது
இதனால்தானா?
நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா?

என்னளவு அறிவோ ஆற்றலோ இல்லாதவர்கள்
நான் விரும்பியவற்றை
விரும்புவதைக் கண்டு
தேவையில்லாமல் ஆற்றாமை கொண்டேன்.
எதிரிகளுக்கு
ஏன் எல்லாமே எளிதாக இருக்கிறது என்று
தெய்வத்திடம் முறையிட்டேன்

மேல்தளத்தில்
எடையில்லாமல் நகர
என்னால் இயலவில்லை
முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்
பூ விரிவதை கண்டதில்லையா
செடி அழுத்துகிறதா என்ன?
ஆனால் நான்
பழுதடைந்த மின்விசிறிபோல
ஓசையிட்டபடி மலர்ந்தேன்
நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து
என் அப்பங்களை வேகவைத்தேன்
அது ஐந்தாயிரம்பேருக்கல்ல
ஐந்துபேருக்கே போதவில்லை.
என் ஏசு
அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல
தேவைக்குமேல் சிலுவையேறியவர்.

மூடிய வாசல்களை எளிதில் திறந்தவர்களை
நான் கண்டிருக்கிறேன்
வெறும் குண்டூசியால்
பூட்டின் ஏழு தடைகளையும் திறந்த
நண்பனின் கண்களில் திருட்டுச்சிரிப்பை
நான் அறிவேன்
அசாத்தியமானதை செய்தவர்கள்
சாத்தியமானதை செய்தவர்கள்போல
பாடுபடுவதில்லை என்பதை
உணர்ந்திருக்கிறேன்
ஏமாற்றியவனை
மாயாவி என
ஊரார் போற்றுவதையும் கண்டதுண்டு
நான் கற்பாறைமேல் கட்டினேன்
இவனோ அலைநீரின்மேல்.

திறக்க
பலமே தேவையில்லாத வாசல்முன்
ஏன் வந்தோம் என்பதையே மறந்து
நின்றிருக்கிறான் ஒரு தனியன்.
மெல்ல அழுத்தினால்போதும்
அழுத்தக்கூட வேண்டாம்
தொட்டாலே போதும்

சரியாகச் சொன்னால்
தொடக்கூட வேண்டியதில்லை.”
Kalpatta Narayanan, தொடுதிரை [Thoduthirai]

Kalpatta Narayanan
“அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று
இனி நான் ராப்பட்டினி கிடக்கலாம்
எவரும் தொந்தரவுசெய்யப்போவதில்லை.

இனி நான் காய்ந்து பறக்கும்வரை தலைதுவட்டவேண்டியதில்லை
எவரும் கைவிட்டு அளைந்து பார்க்கப்போவதில்லை.

இனி நான் கிணற்றுச்சுவரில் அமர்ந்து
தூங்கி வழிந்து புத்தகம் வாசிக்கலாம்
பாய்ந்து வரும் ஓர் கூக்குரல்
என்னை பதறச்செய்யப்போவதில்லை.

இனி நான் அந்திவேளையில் வெளியே செல்ல டார்ச் லைட் எடுக்கவேண்டியதில்லை.
விஷம் தீண்டி
மயிர்க்கால்களில் குருதி கசிய இறந்த அண்டைவீட்டுப் பையனை எண்ணி எழுந்தமர்ந்து பதறிய மனம்
இன்று இல்லை.

இனி நான்
சென்ற இடத்தில் படுத்துறங்கலாம்
நான் வந்தடைந்தால் மட்டும் அணையும் விளக்கு உள்ள ஒரு வீடு
நேற்று அணைந்தது

தன் தவறுதான்
நான் அடையும் அனைத்துக்கும் காரணம்
என்ற கர்ப்பகாலகட்டத்து நினைப்பில் இருந்து
அம்மா இன்று விடுதலைபெற்றாள்.
இதோ இறுதியாக
அவள் என்னை பெற்று முடித்தாள்.

பூமியில்
உடல் வலியால் அன்றி
துயரத்தால் இனி எவரும் அழப்போவதில்லை.”
Kalpatta Narayanan, தொடுதிரை [Thoduthirai]

“அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில், மனிதர்கள் என் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.

நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக் கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.”
Chidbhavananda, The Bhagavad Gita

year in books
Suja
710 books | 24 friends

Vivek KuRa
2,043 books | 438 friends

Sugan
860 books | 277 friends

Dhulkar...
590 books | 279 friends

Chidamb...
1,239 books | 160 friends

Gautami...
944 books | 149 friends

Nash
689 books | 58 friends

Premana...
2,592 books | 477 friends

More friends…
The Brothers Karamazov by Fyodor DostoevskyCrime and Punishment by Fyodor DostoevskyThe Idiot by Fyodor DostoevskyWar and Peace by Leo TolstoyAnimal Farm by George Orwell
Best Books Ever
76,076 books — 282,644 voters


Favorite Genres



Polls voted on by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்

Lists liked by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்