Muthukumar > Muthukumar's Quotes

Showing 1-29 of 29
sort by

  • #1
    Dan    Brown
    “Nothing is more creative... nor destructive... than a brilliant mind with a purpose.”
    Dan Brown, Inferno

  • #2
    Dan    Brown
    “The human mind has a primitive ego defense mechanism that negates all realities that produce too much stress for the brain to handle. It’s called Denial.”
    Dan Brown, Inferno

  • #3
    Jay Shetty
    “The more we define ourselves in relation to the people around us, the more lost we are.”
    Jay Shetty, Think Like a Monk: Train Your Mind for Peace and Purpose Every Day

  • #4
    Brad Stone
    “Jeff always said that when you focus on the business inputs, then the outputs such as revenue and income will take care of themselves.”
    Brad Stone, Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire

  • #5
    Brad Stone
    “Do you trust storytellers, or do you trust data; the ingenuity of artists or the wisdom of the crowd?”
    Brad Stone, Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire

  • #6
    Brad Stone
    “If I have to choose between agreement and conflict, I’ll take conflict every time,” Bezos often said. “It always yields a better result.”
    Brad Stone, Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire

  • #7
    Paulo Coelho
    “We should never judge people without first learning to hear and to respect them.”
    Paulo Coelho, The Way of the Bow

  • #8
    Aadhavan
    “ஆமாம், வார்த்தைகள் - பல வருடங்கள் புழக்கத்திலிருந்து வரும் தூசும். அழுக்கும் படிந்த வார்த்தைகள் - இந்த வார்த்தைகள், இவற்றைச் சார்ந்து ஸ்திரப்பட்டு விட்டிருக்கும். உருவங்கள், பிம்பங்கள் ஆகியவை மூலம் நாம் ஒருவரை யொருவர் அணுகாமலிருந்தால் நல்லது.”
    Aadhavan, காகித மலர்கள் [Kakitha Malargal]

  • #9
    Aadhavan
    “பத்மினியும் மனதாழத்தில், அவர்களிடையேயுள்ள பந்தத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம்தான் அளித்திருக் கிறாளோ, ஒரு வேளை? அப்படியென்றால் தாய்மை அவளைக் கவர்ச்சி குறைந்தவளாக, பாதுகாப்பற்றவளாக உணரச் செய்யலாம். அதே சமயத்தில் அவனைத் தந்தையாக்கியதால் அவனுடைய சகோ சாந்தியடைந்து, அவன் அவள் மீது நன்றி பாராட்டுவானென்று அவர் எதிர்பார்க்கலாம். சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை நிரந்தரமாகச் சிறைப்படுத்திவிட்டதாகத் திருப்தியடையவும் கூடும். ஏன், அவனும் தான் குழந்தை பிறந்த பிறகு அவள் மீது அவனுடைய ஆதிக்கம் உறுதிப்பட்டுவிட்டதாகவும் சமூக நியாயங்களின்படி அவளுக்கு அவனுடைய ஆதரவு இன்றியமையாததாகிவிட்டதென்றும் சுயநலமான ஆசுவாசம் பெறக்கூடும். சே, காதல் கடைசியில் இவ்வளவுதானா? பயன்படுத்திக்கொள்ளல்தான் உண்மையா?”
    Aadhavan, காகித மலர்கள் [Kakitha Malargal]

  • #10
    Aadhavan
    “உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.”
    Aadhavan, காகித மலர்கள் [Kakitha Malargal]

  • #11
    Aadhavan
    “செல்லப்பா தலைமயிரை விரல்களால் கோதி சரிபார்த்துக் கொண்டான். அங்கிருந்து எடை யந்திரத்தின் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனுக்கு முதன் முறையாகத் தன்னைப் பற்றி நம்பிக்கையும் ஆசுவாசமும் ஏற்பட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. தவறான கண்ணாடிகளில் அவன் தன் பிம்பத்தைப் பார்த்துவந்தான். அவ்வளவுதான். இதுதான் அவனுடைய சரியான பிம்பம். இவளைச் சார்ந்து உண்டாகிற பிம்பம். இவள்தான் அவனுக்கேற்ற கண்ணாடி. அவனைச் சிறிதாக்கவோ பெரியதாகவவோ செய்யாத கண்ணாடி.”
    Aadhavan, காகித மலர்கள் [Kakitha Malargal]

  • #12
    Aadhavan
    “கலைஞனின் ஹிப்போக்ரசியைப் பற்றி பேசுகிறவர்கள், தாங்களும் ஹிப்போக்ரசி இல்லாதவர்கள்தானா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் புரட்சிகரமாக எதையும் சாதித்திராதவர்களும்,சந்தித்திராதவர்களும்தான் கலைப்படைப்புகளில் காரசாரமாக, புரட்சிகரமான அம்சங்களை நாடுகிறார்கள். அப்போதுதானே இவற்றை ஆரவாரமாகப் புகழ்வதன்மூலம் தனக்கென ஒரு புரட்சிகரமான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள முடியும், அதற்காக. இவர்களுடைய அனுபவங்களின் வறுமையையே இது காட்டுகிறது.. இதுவும் ஒருவகை எஸ்கேப்பிசம் தான். இவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.”
    Aadhavan, என் பெயர் ராமசேஷன்

  • #13
    Kate Elizabeth Russell
    “People will risk everything for a little bit of something beautiful.”
    Kate Elizabeth Russell, My Dark Vanessa

  • #14
    Daniel H. Pink
    “When feeling is for thinking and thinking is for doing, regret is for making us better.”
    Daniel H. Pink, The Power of Regret: How Looking Backward Moves Us Forward

  • #15
    Jeyamohan
    “நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை..”
    Jeyamohan

  • #16
    Jeyamohan
    “முகமூடிக்கு எப்போதும் ஒரே உணர்ச்சிதான், முகம் அப்படிபட்டதல்ல..”
    Jeyamohan

  • #17
    Jeyamohan
    “வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது”
    Jeyamohan

  • #18
    Jeyamohan
    “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.”
    Jeyamohan

  • #19
    Jeyamohan
    “மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது”
    Jeyamohan, இன்றைய காந்தி

  • #20
    Jeyamohan
    “கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.

    அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.

    புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
    Jeya Mohan, வெண்முரசு [Venmurasu]

  • #21
    Jeyamohan
    “நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக, மரத்தில் உயிராற்றலாக, அலைகடலில் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக, இரவில் இருளாகத் தெரிவதெல்லாமே பிரம்மம்தான். எல்லாமே தெய்வம்தான்.”
    Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]

  • #22
    Jeyamohan
    “அப்பாவால் கொஞ்சப்படாத பெண்கள் மனசில அந்த ஏக்கம் தீரவே தீராது...”
    Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]

  • #23
    Jeyamohan
    “இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மண்ணில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும்.”
    Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal

  • #24
    Jeyamohan
    “கலைகளில் மிக அதிகமான தீவிரம் கொண்டது இசை. மிக அதிகமான உள் விரிவு (Complexity) கொண்டது இலக்கியம். இசை உணர்வுகளுடன் மட்டுமே பேசுகிறது. இலக்கியம், உணர்வுகளுடனும் தர்க்கத்துடனும் ஒரே சமயத்தில் பேசுகிறது.”
    Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam

  • #25
    Jeyamohan
    “யஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லாப் பெண்ணும் ஏதோ ஒரு தருணத்தில் யஷியாக ஆகித் திரும்பி வருகிறாள்.”
    Jeyamohan, இரவு / Iravu

  • #26
    Carl Sagan
    “The lifetime of a human being is measured by decades, the lifetime of the Sun is a hundred million times longer. Compared to a star, we are like mayflies, fleeting ephemeral creatures who live out their lives in the course of a single day.”
    Carl Sagan, Cosmos

  • #27
    Oscar Wilde
    “Be yourself; everyone else is already taken.”
    Oscar Wilde

  • #28
    Kazuo Ishiguro
    “Memories, even your most precious ones, fade surprisingly quickly. But I don’t go along with that. The memories I value most, I don’t ever see them fading.”
    Kazuo Ishiguro, Never Let Me Go

  • #29
    Anne Frank
    “I've found that there is always some beauty left -- in nature, sunshine, freedom, in yourself; these can all help you.”
    Anne Frank, The Diary of a Young Girl



Rss