இந்த நாவலை படித்து முடித்தபோது எனக்கு இருவிதமான உணர்வுகள் வந்தன. ஒருபுறம், சுஜாதா எழுப்பிய கேள்விகள் என்னை பல நாட்கள் சிந்திக்க வைத்தன. விதி உண்மையா? செயல் அர்த்தமுள்ளதா?இவை எத்தனை முக்கியமான கேள்விகள். ஆனால் மறுபுறம், இந்த பெரிய தத்துவ கேள்விகளுக்கு நாவல் அரைகுறை பதில்களே அளிக்கிறது என்ற ஏமாற்றமும் வந்தது. ஒரு த்ரில்லரை படிக்கஆரம்பித்து, தத்துவவிவாதத்தை எதிர்பார்த்து, இறுதியில் இரண்டுமே முழுமையாககிடைக்காமல் இருந்தது
— Feb 15, 2026 05:44AM
Add a comment