இந்த யாமத்தில் அவிழும் முகிழின்ஒரு துளி மதுவினும் பேரினிமைஅவன் மிச்சம் வைத்த தேறல்குறையற்ற யாழின் நரம்புகள்அணிச்சரமென கோர்த்திடஒளிர்நிலவின் தண்மைமெதுவாய் கரைந்திடஉரசிய தோள்கள் அறியும்உண்மை நிலைதனைஅனைத்தும் மாயை
தன்னினிமையே மெய்யெனநகைத்தது தேறலின் கடைத்துளி
யாமமோ கடந்திட மறந்து துயின்றதுஅவன்மேல் சரிந்தவள் மெதுவாய் மொழிந்தாள்துயிலும் இரவுதனை எழுப்பி விடாதேயென்று
- வெண்பா கீதாயன்
Published on October 23, 2023 14:02