“உரைநடை எழுத்து என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது. அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும். வாழ்வின் நெருக்கடியும் பண்டமாற்றும் நேரடியாகக் காணமுடியும். மேலும் ஒரே இரைச்சல், இடைவிடாத பேச்சு நிரம்பியிருக்கும். ஒரே இடத்தினுள் நூறுவிதமான நிகழ்வுகள். அன்றாட தேவைகளுக்கான அலைமோதல்கள் நடைபெறும். சந்தைக்கான பொருளின் விலை பணம், ஏமாற்றம், பிழைப்பிற்கான முட்டி மோதல்கள் என காலில் மண்ணும் நுரையீரலில் புழுதியும் படியும்படியான இயல்பு வாழ்வு கொண்டதாகயிருக்கும்.”
―
―
“எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது.”
― Siragai Viri, Para
― Siragai Viri, Para
“எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.”
―
―
“கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டவை கவிதை.”
―
―
“கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
Priyadarsini’s 2025 Year in Books
Take a look at Priyadarsini’s Year in Books, including some fun facts about their reading.
Polls voted on by Priyadarsini
Lists liked by Priyadarsini




![உப்பு வேலி [Uppu Veli] by Roy Moxham உப்பு வேலி [Uppu Veli] by Roy Moxham](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1519708453l/38800467._SY75_.jpg)
















