“எழுதுகிற எழுத்தெல்லாம் நினைத்துப் பார்க்கப்படுபவைதான். நினைவு என்பது நனவின் மீள் பார்வை.”
―
―
“நாவல் வடிவத்தின் அப்பழுக்கற்ற உதாரணம் ஒன்றைத் தனது மொழியில் சாத்தியப்படுத்துவது என்பது ஒருபோதும் கலைஞனின் உத்தேசமாக இருக்க இயலாது. அதன் பூரண விளைவைத் தன் சூழலில் உண்டு பண்ணுவது மட்டுமே அவனுடைய இலக்கு. சூழலில் விசேஷ இயல்புகள், அவனுடைய வடிவ கற்பனையை மாற்றி அமைக்கின்றன. கையில் இருக்கும் வடிவத்துக்கும், வெளிப்பாட்டின் தேவைக்குமான இடைவெளி, ஒரு நாவலாசிரியனை எப்போதும் படுத்தியபடியே தான் இருக்கும். அத்துடன் மரபான வடிவ உருவத்துடன் தன் ஆளுமையின் தனித்தன்மை மோதும் கட்டங்களையும் அவன் அடைவான். இப்போராட்டத்தில் இருந்து தான் வடிவ மீறல்கள் நிகழ்கின்றன.”
―
―
“உரைநடை எழுத்து என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது. அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும். வாழ்வின் நெருக்கடியும் பண்டமாற்றும் நேரடியாகக் காணமுடியும். மேலும் ஒரே இரைச்சல், இடைவிடாத பேச்சு நிரம்பியிருக்கும். ஒரே இடத்தினுள் நூறுவிதமான நிகழ்வுகள். அன்றாட தேவைகளுக்கான அலைமோதல்கள் நடைபெறும். சந்தைக்கான பொருளின் விலை பணம், ஏமாற்றம், பிழைப்பிற்கான முட்டி மோதல்கள் என காலில் மண்ணும் நுரையீரலில் புழுதியும் படியும்படியான இயல்பு வாழ்வு கொண்டதாகயிருக்கும்.”
―
―
“கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
“எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது.”
― Siragai Viri, Para
― Siragai Viri, Para
Priyadarsini’s 2025 Year in Books
Take a look at Priyadarsini’s Year in Books, including some fun facts about their reading.
Polls voted on by Priyadarsini
Lists liked by Priyadarsini




![உப்பு வேலி [Uppu Veli] by Roy Moxham உப்பு வேலி [Uppu Veli] by Roy Moxham](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1519708453l/38800467._SY75_.jpg)
















