Prem

Add friend
Sign in to Goodreads to learn more about Prem.

https://experimentswithphotos.wordpress.com/

The Dragonet Prop...
Rate this book
Clear rating

 
Saga, Volume 2
Prem is currently reading
by Brian K. Vaughan (Goodreads Author)
bookshelves: currently-reading
Rate this book
Clear rating

 
See all 6 books that Prem is reading…
Loading...
Rabindranath Tagore
“வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறனையும் சக்தியையும் யார் பெற்றிருக்கிறார்களோ அவர்களே சமுதாயத்தைச் சிறப்படையச் செய்வார்கள். விதிமுறைகளுக்கு அடிபணிவோரால் சமுதாயத்தை வளர்க்க முடியாது. அதோடு ஒட்டி ஒழுகுபவர்கள் அதை அப்படியே இருக்கத்தான் செய்வார்கள்.”
Rabindranath Tagore, Gora

Jeyamohan
“கற்பனாவாதம் ஒரு வயதில் நம்மை ஆட்கொள்கிறது. மண்ணில் கால்தொடாத உலகங்களில் வாழ்கிறோம். பின்னர் மெல்ல மெல்ல யதார்த்தங்களுக்குள் நுழைகிறோம். வெற்றுக்கற்பனைகள் என கற்பனாவாதத்தை இகழவும் விலகவும் தொடங்குகிறோம். கற்பனாவாதத்தை விட்டு விலகுவது முதிர்ச்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. கற்பனாவாதத்தை விட்டு விலகுவதென்பது நடைமுறைத் தர்க்கபுத்தி வலுவடைவதன் அடையாளம் மட்டுமே.அதன் நன்மைகள் பல உண்டு. ஆனால் இழப்புகளும் அதற்கிணையானவை. கற்பனாவாதம் மட்டுமே மொழியை அதன் உச்சங்கள் நோக்கி கொண்டு செல்கிறது. யதார்த்தவாதம் என்றுமே மொழியின் நடைமுறைத்தன்மையை மீறுவதில்லை. மொழி அதற்கு சிறகு அல்ல, ஒரு பயன்படுபொருள் மட்டுமே. ஆகவே மொழியில் ஓர் இயந்திரக்கச்சிதத்தை மட்டுமே யதார்த்தவாதம் அடைகிறது. அந்தக் கச்சிதமே மொழியின் சிறந்த நிலை என நம்புபவர்கள் மொழியை அறிவதே இல்லை. கச்சிதமான நடையே நல்ல நடை என நம்புவதுபோல இலக்கியத்தில் நுணுக்கமான வீழ்ச்சி பிறிதொன்றில்லை. ஏனென்றால் அப்படி கச்சிதம் என ஒன்றில்லை. கச்சிதம் என நாம் எண்ணுவது கொடுப்பவனும் பெறுபவனும் சந்திக்கும் அந்த தொடர்புறுத்தல்புள்ளியைச் சார்ந்தது. ஆனால் அது மிக எளிதில் மாறிவிடும்.”
Jeyamohan

ராஜ் கௌதமன்
“நெடுஞ்சாலையில் பஸ் பாரீஸை நோக்கிப் பறந்தது. சாலையின் இரு புறங்களிலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வரும்போது நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலைத் தடுப்பதற்கு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் மனிர்களுக்குத் தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்ளுவதில் பணக்கார நாடுகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன. உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை; அவர்களிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறைகளில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது தியாகம்; விட்டுக்கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம்; தண்டனை வழங்கலாம்.

சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்

Jeyamohan
“ஆனால், மனிதன் அறிவது தன் அறிவை மட்டும்தான் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறாயா? மனிதனின் அறிவு அறியக்கூடுவது என்னும் எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள எதையும் அவன் அறியமுடியாது. அந்த அறியக்கூடுவது என்பது மானுட மூளையின் இயல்பால் வரையறைசெய்யப்பட்டது. இப்படி சொல்கிறேன், மானுட மூளைக்கு ஓர் அமைப்பும் செயல்முறையும் உள்ளது. அந்த அமைப்புக்கும் செயல்முறைக்கும் ஏற்ப அது பிரபஞ்சத்தை அறிகிறது. அந்த அறிவை பிரபஞ்சம் என புரிந்துகொள்கிறது. அதாவது மூளை தன்னை வெளிப்பொருளில் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ்த்திப்பார்த்துக்கொள்வதுதான் பிரபஞ்சம் என்பது.”
Jeyamohan

பா. திருச்செந்தாழை
“நன்னீரால் வளர்ந்த தாவரத்தின் முதல் கோடைக்காலம் அது.”
பா. திருச்செந்தாழை, விலாஸம்

64602 தமிழ் புத்தகங்கள் (Tamil Books) — 1061 members — last activity Jan 02, 2026 07:50AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
729 Indian Readers — 17581 members — last activity 48 minutes ago
"For Indians /non Indians/Earthlings/Aliens, who have a zeal to read and are passionate about books" says the Creator of this group :) To add to it, ...more
220 Goodreads Librarians Group — 317626 members — last activity 0 minutes ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
27842 Moderator Support Group — 2208 members — last activity Mar 24, 2026 07:32PM
For Moderators and Co-Moderators: This is a dedicated group for discussing ideas, sharing answers, and finding solutions with the challenges of runni ...more
year in books
Shiva S...
428 books | 136 friends


Saravan...
454 books | 67 friends

இரா  ஏழ...
261 books | 236 friends

Vivek KuRa
2,084 books | 453 friends

Manikan...
586 books | 163 friends

Milinta
622 books | 94 friends

Divya
1,797 books | 263 friends

More friends…
சத்திய சோதனை by Mahatma Gandhiபொன்னியின் செல்வன் 1 by Kalki Krishnamurthyபொன்னியின் செல்வன் 2 by Kalki Krishnamurthyபொன்னியின் செல்வன் 3 by Kalki Krishnamurthyபொன்னியின் செல்வன் 4 by Kalki Krishnamurthy
Tamil Audiobooks
73 books — 2 voters
Into the Wild by Jon KrakauerInto Thin Air by Jon KrakauerThe Motorcycle Diaries by Ernesto Che Guevara
Favorite Travel Books
2,037 books — 3,944 voters

More…



Polls voted on by Prem

Lists liked by Prem