கைகால் முளைத்த அன்னப் பறவையை போல – என் புதிய நாவல் றெக்கை

‘றெக்கை;’ -அத்தியாயம் 2 சொல்வனம் இணைய இலக்கிய இதழில்
-v———————————————————-
Rekkai chapter 2
டாக்டரம்மா’

. ஊர்ப் பெரியவர்களில் ஒருத்தர் அழைக்கிறார்.

”ராட்சச வண்டிக்காரி’ – குரல்கள் காத்திரமாகச் சேர்ந்து ஒலித்தன.

டாக்டர் நிர்மலா நின்றாள்.

எல்லா வீட்டுக் கூரை மேலும் சுரைக்காய் காய்த்துத் தொங்கியதை பார்த்தபடி நிர்மலா ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னாள் – நான் உள்ளே போய் மரியாதை செலுத்திட்டு வந்துடறேன்.

அவளை வரவேற்கலாமா அல்லது திருப்பி அனுப்பிவிடலாமா என்று முடிவுக்கு வர முடியாமல் அவர்கள் தவித்தது தெரிந்தது. சாவு வீட்டில் வந்தவர்களை வரவேற்பார்களா என்ன?

திரும்ப ‘டாக்டரம்மா’ கூவல். வாசல் கடந்து உள்ளேயும் போகாமல், வெளியேயும் வராமல் நிற்க, அவள் பின்னால் இருந்து தேவதை தேவதை என்று மனம் கவிந்து குரலில் ஏறி வழிய அத்தனை பேரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். குலவையும் உச்ச சப்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அருகே நிர்மலாவின் மகள் வெண் சிறகுகள் தோளிலிருந்து கணுக்கால் வரை படிந்திருக்க, கைகால் முளைத்த அன்னமாக நின்று கொண்டிருந்தாள். அவர்கள் ஆச்சரியப்பட்டது சரிதான். பறந்து வந்த உயரமான தேவதை போல் சங்கோஜத்தோடு அசைந்திருந்தாள் அவள்.

அத்தனை பெரிய ஆள்கூட்டம் நோக்கி அதிர்ந்து நிற்கத் தனிப்பட்டுப் போனாள் அந்தச் சிறுமி. அழத் தொடங்கினாள்.

அம்மா அம்மா.

”ஒண்ணும் இல்லே விசி.. உன்னை எல்லோருக்கும் பிடிச்சிருக்கு, வா-ன்னு வரவேற்கறாங்க. கையை ஆட்டி அதை ஏத்துண்டு வா’

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 17:54
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.