“ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ என்று அவர் சொன்னார். எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவுசெய்யவேண்டும். ஆனால் அந்தக் கனவுத்தன்மை அன்றாடவாழ்க்கையில் இருந்தால் மிக விரைவிலேயே நடைமுறைச் சிக்கல்களால் சோர்ந்துபோகவேண்டியிருக்கும். உலகியல்வாழ்க்கையின் ஈரமற்றதன்மை, அதன் கணக்குவழக்குகள் சலிப்பூட்டும். ஓரிரு அடிகளுக்குப்பின் அந்த ஒட்டுமொத்த கனவின்மேல், இலட்சியத்தின்மேல் அவநம்பிக்கையும் கசப்பும் உருவாகும்.”
―
―
“ஒரு வாழ்நாள் நோன்பின் பொருட்டு பிற அறங்களை கைவிடுபவனுக்கும் தெய்வங்கள் கனிகின்றன. தன் பிறவியின் நெறியென தமையனின் ஆணைக்கு ஏற்ப வாழ்வதைக்கொண்டவன் அவன். பிற அறங்களுக்குரிய அத்தனை தெய்வங்களும் அவனிடம் அன்புடன்தான் இருக்கும்.”
―
―
“ஒரு கலையின் பொருட்டு பிற அனைத்தையும் இழப்பவனே அக்கலையை அடைகிறான். அக்கலையில் அவன் தேர்வான் என்றால் பிற அனைத்தையும் அக்கலையே அவனுக்கு அளிக்கும்.”
―
―
Preethi’s 2025 Year in Books
Take a look at Preethi’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Preethi
Lists liked by Preethi







![அறம் [Aram] by Jeyamohan அறம் [Aram] by Jeyamohan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1395939322l/17793442._SY75_.jpg)
















